ஸ்ரீமதி மரண வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் - திருப்பூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் போராட்டம் - பரபரப்பு..!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ராம் காலனியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பு அமைப்பின் வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: கள்ளக்குறிச்சியில் பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்த மாணவி ஸ்ரீமதியின் வழக்கை முறையாக விசாரிக்க கோரி இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் பி.என்.ரோடு, மில்லர் பேருந்து நிறுத்தம் அருகே செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது.



அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென துண்டு பிரசுரங்களுடன் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கோஷங்களை எழுப்பினார்.

அவரது செயலை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று கொண்டிருந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர்.



பின்னர், கீழே இறங்கிய நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ராம் காலனியை சேர்ந்த மனோஜ்குமார் (20) என்பதும், மக்கள் பாதுகாப்பு அமைப்பின் வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இறந்த மாணவி ஸ்ரீமதியின் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும். என்றும் அந்த வழக்கில் தொடர்புடைவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேபோல், நீண்ட ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, இளைஞர் மனோஜ்குமாரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...