21 டேன்ஸ் ஸ்டூடியோ-வின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா வரும் பிப்ரவரி 5-ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது


கோவை மாவட்டம், இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் 21 டேன்ஸ் ஸ்டூடியோவில் பல்வேறு விதமான நடனப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த நடனப் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டு 3-ம் ஆண்டு துவக்க விழா "சாலிடிஃபை" என்னும் தலைப்பில் வரும் பிப்ரவரி 5ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது.

அன்றைய தினம் கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் அமைந்துள்ள கலையரங்கில் மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிச்சைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சசி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். 

மேலும், விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் புகழ்பெற்ற சையது சுபஹான், இசை அமைப்பாளர் ஜோன்ஸ் ருபர்ட், "காதல் கண்கட்டுதே" திரைப்பட நடிகை திவ்யா என்னும் அதுல்யா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும், Mrs.  இந்தியா யெர்த் 2016 விருது பெற்றவரான ஜெயா மகேஷ் மற்றும் கேளராவில் ஐஏஎஸ் அதிகாரியான உமேஷ் ஆகியோர் கவுரவத் தலைவர்களாக பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 21 டேன்ஸ் ஸ்டூடியோவின் "சாலிடிஃபை" நிகழ்ச்சியில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கு நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 800 முதல் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...