21 டேன்ஸ் ஸ்டூடியோ-வின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா வரும் பிப்ரவரி 5-ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது


கோவை மாவட்டம், இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் 21 டேன்ஸ் ஸ்டூடியோவில் பல்வேறு விதமான நடனப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த நடனப் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டு 3-ம் ஆண்டு துவக்க விழா "சாலிடிஃபை" என்னும் தலைப்பில் வரும் பிப்ரவரி 5ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது.

அன்றைய தினம் கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் அமைந்துள்ள கலையரங்கில் மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிச்சைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சசி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். 

மேலும், விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் புகழ்பெற்ற சையது சுபஹான், இசை அமைப்பாளர் ஜோன்ஸ் ருபர்ட், "காதல் கண்கட்டுதே" திரைப்பட நடிகை திவ்யா என்னும் அதுல்யா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும், Mrs.  இந்தியா யெர்த் 2016 விருது பெற்றவரான ஜெயா மகேஷ் மற்றும் கேளராவில் ஐஏஎஸ் அதிகாரியான உமேஷ் ஆகியோர் கவுரவத் தலைவர்களாக பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 21 டேன்ஸ் ஸ்டூடியோவின் "சாலிடிஃபை" நிகழ்ச்சியில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கு நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 800 முதல் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...