மாமன்ற கூட்டம்: வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளை கைவிட கூடாது - அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்.

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய கூடாது எனவும் அப்பணிகளை கைவிட கூடாது என வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கண்டன பதாகைகளை ஏந்தி விக்டோரியா ஹால் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


கோவை: கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.



சமீபத்தில், கோவையில் கட்டுப்பட்டு வரும் வெள்ளலூர் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், மாமன்ற கூட்டம் மற்றும் பொதுமக்கள் கருத்துக்கேற்ப அது முடிவு செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்திருந்தார்.



எனவே, இன்று நடைபெறும் கூட்டத்தில் வெள்ளலூர் பேருந்து நிலைய இடமாற்றம் குறித்து ஏதேனும் தீர்மானமோ அல்லது தகவல்களோ வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய கூடாது எனவும் அப்பணிகளை கைவிட கூடாது என வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கண்டன பதாகைகளை ஏந்தி விக்டோரியா ஹால் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



இது குறித்து பேசிய அவர்கள், எதனால் இப்பணிகள் கைவிடப்படுகிறது என கேள்வி எழுப்பினர். பேருந்து நிலையம் மாற்றப்பட்டதால், மக்களின் வரிப்பணம் வீணக்கப்படும் என தெரிவித்தனர். மேலும், கோவை மாநகராட்சி பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார் என கூறிய அவர்கள் அப்பணம் எங்கே எனவும் உடனடியாக பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...