திருப்பூரில் தற்காலிக மின் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி - திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியத்தில் தற்காலிக தொழிலாளராக பணியாற்றி வந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியான சம்பவம் குறித்து, திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்டபட்ட கே வி ஆர் நகர் 2வது வீதி கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெய பிரகாஸ் (35). திருமணமானவர் இவருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியத்தில் தற்காலிக தொழிலாளராக பணியாற்றி வந்த இவர், இன்று மாலை திருப்பூர் தாராபுரம் ரோடு, பி.கே.ஆர் காலனி அருகே உள்ள ஒரு மின் கம்பத்தில் மின் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உடல் கருகி மின் கம்பத்திலேயே பரிதாபமாக துடி துடித்து பலியானார். 



இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனே தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.



தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து தீர விசாரித்து வருகின்றனர்.

மின் ஊழியர் ஒருவர் பழுது நீக்கும் போது, மின்சாரம்.பாய்ந்து உயிரிழந்த சம்பவம் மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...