தமிழகத்தில் முதல் முறையாக, கோவையில் பாதாளச் சாக்கடை திட்டப் பணியாளர்களுக்காக மகிழ் புத்துணர்வு மையம் திறப்பு

பாதாள சாக்கடை திட்ட பணியாளர்கள் பணி முடிந்து குளிக்க, ஓய்வெடுக்க, உணவு உண்ண, விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மகிழ் புத்துணர்வு மையத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையாளர் பிரதாப் திறந்து வைத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பணி முடிந்து வந்து குளித்து ஓய்வெடுக்கவும், சதுரங்கள் போன்ற விளையாட்டுகளை விளையாடி மன ரீதியாக புத்துணர்வு பெறும் வகையில் புத்துணர்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 72 ஆவது வார்டு, மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் இந்த “பணி செய்து மகிழ் புத்துணர்வு மையம்” அமைக்கப்பட்டு உள்ளது.



இந்த மையத்தை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையாளர் பிரதாப் ஆகியோர் திறந்து வைத்தனர். தமிழகத்தில் முதன் முதலாக பாதாள சாக்கடைத் திட்ட பணியாளர்களுக்கு குளியலறை, ஓய்வறை, கழிவறை குடிநீர் வசதி மற்றும் உணவருந்தும் கூடம், விளையாட்டு வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.



துவக்க நாளான இன்று, போதை மற்றும் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...