தமிழகத்தில் முதல் முறையாக, கோவையில் பாதாளச் சாக்கடை திட்டப் பணியாளர்களுக்காக மகிழ் புத்துணர்வு மையம் திறப்பு

பாதாள சாக்கடை திட்ட பணியாளர்கள் பணி முடிந்து குளிக்க, ஓய்வெடுக்க, உணவு உண்ண, விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மகிழ் புத்துணர்வு மையத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையாளர் பிரதாப் திறந்து வைத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பணி முடிந்து வந்து குளித்து ஓய்வெடுக்கவும், சதுரங்கள் போன்ற விளையாட்டுகளை விளையாடி மன ரீதியாக புத்துணர்வு பெறும் வகையில் புத்துணர்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 72 ஆவது வார்டு, மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் இந்த “பணி செய்து மகிழ் புத்துணர்வு மையம்” அமைக்கப்பட்டு உள்ளது.



இந்த மையத்தை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையாளர் பிரதாப் ஆகியோர் திறந்து வைத்தனர். தமிழகத்தில் முதன் முதலாக பாதாள சாக்கடைத் திட்ட பணியாளர்களுக்கு குளியலறை, ஓய்வறை, கழிவறை குடிநீர் வசதி மற்றும் உணவருந்தும் கூடம், விளையாட்டு வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.



துவக்க நாளான இன்று, போதை மற்றும் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...