குடும்பத்தார் பெயரில் சொத்துக்களை குவித்த கோவை பத்திர பதிவாளர் - அதிர்ச்சி தகவல்கள்...!

கோவையில் மாமியார் மற்றும் மனைவியின் சகோதரி பெயரில் சொத்துக்களை வாங்கியதாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரி செல்வகுமார் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட பத்திரப்பதிவுத்துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தவர் செல்வக்குமார் (46). சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர், கடைசியாக கோவை மாவட்ட பதிவாளராக (தணிக்கை) பிரிவில் பணியாற்றினார். இவர் மீது துறை ரீதியான புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தத நிலையில், தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செல்வக்குமாரின் மாமியார் பாண்டியம்மாள், ஓய்வூதியம் பெறுபவர். செல்வக்குமாரின் மனைவி முகிலின், சகோதரி தென்றல், காரைக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

செல்வக்குமார், கோவை மாவட்டம் விளாங்குறிச்சி ஸ்ரீ வராகமூர்த்தி அவென்யூவில் மனைவியின் சகோதரியான தென்றலின் பெயரில் ஆடம்பர பங்களா கட்டியுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஜன.,1 முதல் 2012ம் ஆண்டு டிச.,31 வரை, தன் மாமியார் பாண்டியம்மாள் பெயரிலும், மனைவியின் சகோதரி தென்றல் பெயரிலும் சொத்துக்களை வாங்கியுள்ளார்.

பாண்டியம்மாள், தென்றல் ஆகியோரது சொத்துக்களின் மதிப்பு, 2009 ஜன.,1ல் வெறும் 11 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், 2012 டிச.,31ல் 89 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயாக அவர்களது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த காலத்தில் அவர்களது வெளிப்படையான வருவாய் ஆதாரங்களின் மூலம் 27 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்திருக்க முடியும். ஆனால், வருவாய்க்கு அதிகமாக 65 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் அவர்கள் பெயரில் குவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் செல்வக்குமார், அவரது மாமியார் பாண்டியம்மாள், மனைவியின் சகோதரி தென்றல் ஆகியோர், உண்மையான வருவாய் ஆதாரத்தை காட்டிலும், 242 சதவீதம் அதிகமாக சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்பது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு சட்டங்களின் அடிப்படையில், மாவட்ட பதிவாளர் செல்வக்குமார், அவரது மாமியார், மனைவியின் சகோதரி ஆகியோர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

யார் இந்த செல்வக்குமார்..?

மாவட்ட பதிவாளர் செல்வக்குமார், முந்தைய அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் சர்வ வல்லமையுடன் வலம் வந்தவர்.

இவர் பணியாற்றிய, 19 ஆண்டுகளும் கோவை மாவட்டத்தில் தான் பணியில் இருந்துள்ளார். அமைச்சர்கள், மாஜி அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என வி.ஐ.பி.,க்கள் பலரும் பத்திரப்பதிவு செய்வது என்றால் செல்வக்குமாரை தான் தொடர்பு கொள்வர்.

அப்படி பத்திரப்பதிவு செய்த வகையில் தான், அ.தி.மு.க., வி.ஐ.பி.,க்கள் பலரும், அவரது நட்பு வளையத்தில் வந்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அவர் மீதான புகார்களில் விசாரணை சூடு பிடித்தது. இப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வழக்கு பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...