சிறுமியின் தந்தை எஃப் ஐ ஆர் மற்றும் சிறுமியின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, கடத்திய குற்றவாளிகள் கோவைக்கு வருவதாக தெரிவித்துள்ளதால், தமிழ்நாடு காவல் துறை ரயில்வே போலீசாரை டேக் செய்து உதவி கோரியுள்ளார்.
கோவை: வடமாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட நிலையில், அவரை கடத்தியவர்கள் கடைசியாக கோவைக்கு வருவதாக தெரிவித்துள்ளதால், சிறுமியின் தந்தை தமிழக காவல்துறையை டிவிட்டர் பக்கத்தில் டேக் செய்து உதவி கோரியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிறுமியின் தந்தை தனது டிவிட்டர் பக்கத்தில் தனது 12 வயது மகளை சிலர் கடத்திச் சென்று விட்டதாகவும், அவர்கள் இன்று இரவு அல்லது நாளைய தினம் கோவை ரயில் நிலையத்திற்கு வருவார்கள் என தொலைபேசியில் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவில் தனது மகளின் புகைப்படத்தையும், கடத்தல் குறித்து காவல்நிலையத்தில்அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலையும் இணைத்துள்ள அவர், தமிழக காவல்துறையையும், ரயில்வே காவல்துறையையும் டேக் (Tag) செய்து உதவி கோரியிருந்தார்.
குற்றவாளிகள், கோவை ரயில் நிலையத்திற்கு வருவார்கள் என்று தெரிவித்திருப்பதால், தமிழக காவல்துறை, கோவை நகர காவல்துறைக்கும், ரயில்வே போலீசாருக்கும் குற்றவாளிகளை பிடிக்க அலர்ட் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பதிலளித்துள்ள கோவை மாநகர காவல் ஆணையாளர்பாலகிருஷ்ணன், கடத்தல் கும்பலை பிடிக்க கோவை சிட்டி சைபர் கிரைம், ரயில்வே போலீசாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, தெரிவித்துள்ளார்.
அந்த சிறுமியின் தந்தை தனது டிவிட்டர் பக்கத்தில் தனது 12 வயது மகளை சிலர் கடத்திச் சென்று விட்டதாகவும், அவர்கள் இன்று இரவு அல்லது நாளைய தினம் கோவை ரயில் நிலையத்திற்கு வருவார்கள் என தொலைபேசியில் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவில் தனது மகளின் புகைப்படத்தையும், கடத்தல் குறித்து காவல்நிலையத்தில்அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலையும் இணைத்துள்ள அவர், தமிழக காவல்துறையையும், ரயில்வே காவல்துறையையும் டேக் (Tag) செய்து உதவி கோரியிருந்தார்.
குற்றவாளிகள், கோவை ரயில் நிலையத்திற்கு வருவார்கள் என்று தெரிவித்திருப்பதால், தமிழக காவல்துறை, கோவை நகர காவல்துறைக்கும், ரயில்வே போலீசாருக்கும் குற்றவாளிகளை பிடிக்க அலர்ட் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பதிலளித்துள்ள கோவை மாநகர காவல் ஆணையாளர்பாலகிருஷ்ணன், கடத்தல் கும்பலை பிடிக்க கோவை சிட்டி சைபர் கிரைம், ரயில்வே போலீசாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, தெரிவித்துள்ளார்.