லக்னோவில் இருந்து 12 வயது சிறுமி கோவைக்கு கடத்தல்; தந்தை டிவிட்டர் புகார் - கோவை சிட்டி சைபர் கிரைம் மற்றும் ரெயில்வே போலீசார் விசாரணை.

சிறுமியின் தந்தை எஃப் ஐ ஆர் மற்றும் சிறுமியின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, கடத்திய குற்றவாளிகள் கோவைக்கு வருவதாக தெரிவித்துள்ளதால், தமிழ்நாடு காவல் துறை ரயில்வே போலீசாரை டேக் செய்து உதவி கோரியுள்ளார்.


கோவை: வடமாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட நிலையில், அவரை கடத்தியவர்கள் கடைசியாக கோவைக்கு வருவதாக தெரிவித்துள்ளதால், சிறுமியின் தந்தை தமிழக காவல்துறையை டிவிட்டர் பக்கத்தில் டேக் செய்து உதவி கோரியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுமியின் தந்தை தனது டிவிட்டர் பக்கத்தில் தனது 12 வயது மகளை சிலர் கடத்திச் சென்று விட்டதாகவும், அவர்கள் இன்று இரவு அல்லது நாளைய தினம் கோவை ரயில் நிலையத்திற்கு வருவார்கள் என தொலைபேசியில் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த பதிவில் தனது மகளின் புகைப்படத்தையும், கடத்தல் குறித்து காவல்நிலையத்தில்அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலையும் இணைத்துள்ள அவர், தமிழக காவல்துறையையும், ரயில்வே காவல்துறையையும் டேக் (Tag) செய்து உதவி கோரியிருந்தார்.

குற்றவாளிகள், கோவை ரயில் நிலையத்திற்கு வருவார்கள் என்று தெரிவித்திருப்பதால், தமிழக காவல்துறை, கோவை நகர காவல்துறைக்கும், ரயில்வே போலீசாருக்கும் குற்றவாளிகளை பிடிக்க அலர்ட் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பதிலளித்துள்ள கோவை மாநகர காவல் ஆணையாளர்பாலகிருஷ்ணன், கடத்தல் கும்பலை பிடிக்க கோவை சிட்டி சைபர் கிரைம், ரயில்வே போலீசாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, தெரிவித்துள்ளார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...