கோவையில் ஒரே மேடையில், ஒரு லட்சத்து ஏழாயிரம் பயனாளிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நலதிட்ட உதவிகள்  இன்று வழங்கவுள்ளார்.

கோவை மாவட்டம் ஈச்சனாரியில் நடைபெறுகின்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.272 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை  திறந்து வைத்து ரூ.663 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடைக்கல் நாட்டவுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் நடைபெறுகின்ற அரசு விழாவில், அதிகபட்சமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி,ரூ.272 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைதிறந்து வைத்து மற்றும்ரூ.663 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர்இன்று அடைக்கல் நாட்டவுள்ளார். 



கோவை வந்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஒரே இடத்தில், ஒரே மேடையில் அதிகபட்சமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார். இதற்கு முன்,கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பயன்பெற்ற பயனாளிகளை ஒப்பிடும்போது, இன்றையநிகழ்ச்சியின் பயனாளிகள் நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 



பொதுப்பணித்துறை,கோவை மாநகராட்சி,தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, நீர்வளத் துறை,உயர்கல்வித் துறை, பொதுப்பணித்துறை (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு), நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.272 கோடி மதிப்பில் 229 முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்து வைப்பார்.

அதே போல, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கோவை மாநகராட்சி, நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, பேரூராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிகளின் நிர்வாகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை (தாட்கோ- பொறியியல் துறை),பொதுப்பணித்துறை (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு), பொதுப்பணித்துறை(மருத்துவப்பணிகள்) கூட்டுறவுத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைஆகிய துறைகளின் சார்பில் ரூ. 663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுவார்.

அரசு நலத்திட்ட உதவிகள் – மருத்துவம் –மக்கள் நல்வாழ்வுத்துறை,மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை,கூட்டுறவுத்துறை, கோவை மாநகராட்சி, பள்ளிக் கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழில்வணிகத் துறை (மாவட்ட தொழில் மையம்), தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்குகின்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் -- செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ், சாமிநாதன், முத்துச்சாமி, ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...