கோவை குறிச்சி குளம் அருகே டிப்பர் லாரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்து. படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விஷ்ணு என்ற கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் அடுத்த தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விஷ்னு(18) மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் விஷ்ணு தனது நண்பர்களான இடையர் வீதியை சேர்ந்த விக்னேஷ், மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ்வரன் ஆகியோரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார்.
குறிச்சி குளம் அருகே சென்ற போது, எதிரே லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது.

இதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த சதீஸ்வரன், விக்னேஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஷ்ணு தனது நண்பர்களான இடையர் வீதியை சேர்ந்த விக்னேஷ், மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ்வரன் ஆகியோரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார்.
குறிச்சி குளம் அருகே சென்ற போது, எதிரே லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது.
இதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த சதீஸ்வரன், விக்னேஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.