கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கரிவரத ராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.5.7 கோடி மதிப்புள்ள இடம் மீட்பு

கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, நாஸ் தியேட்டர் அருகே இருந்த ரூ.5.70 கோடி மதிப்புள்ள 7.12 சென்ட் வணிக வளாக கட்டிடம் மற்றும் குடியிருப்பை அறநிலையத்துறையினர் மீட்டனர்.


கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, வணிக வளாகக் கட்டிடம் மற்றும் குடியிருப்பு, பகுதி ஆகியவை நீண்ட நாட்களாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

இந்நிலையில், கோவிலுக்கு அருகே, நாஸ் தியேட்டர் சாலையில் உள்ள ரூ.5.70 கோடி மதிப்புள்ள 7.12 சென்ட் வணிக வளாக கட்டிடம் மற்றும் குடியிருப்பை அறநிலையத் துறையினர் மீட்டனர்.



இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி, கோவில் தக்கார் செல்வம் பெரியசாமி, செயல் அலுவலர் சரவணக்குமார், செயல் அலுவலர்கள் வெற்றிச்செல்வன், பாண்டியராஜ், நாகராஜ், அறநிலையத்துறை ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர் கொண்ட குழு போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த இடம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டை கரிவரத ராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை மீட்கப்பட்ட இடத்தில் ஒட்டப்பட்டது.

கடந்த 8 ஆம் தேதி, கோவை சவுரிபாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் திருக்கோவிலுக்குசொந்தமான ரூபாய் 10 கோடி மதிப்பிலான 27.78 செண்ட் கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...