கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கரிவரத ராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.5.7 கோடி மதிப்புள்ள இடம் மீட்பு

கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, நாஸ் தியேட்டர் அருகே இருந்த ரூ.5.70 கோடி மதிப்புள்ள 7.12 சென்ட் வணிக வளாக கட்டிடம் மற்றும் குடியிருப்பை அறநிலையத்துறையினர் மீட்டனர்.


கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, வணிக வளாகக் கட்டிடம் மற்றும் குடியிருப்பு, பகுதி ஆகியவை நீண்ட நாட்களாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

இந்நிலையில், கோவிலுக்கு அருகே, நாஸ் தியேட்டர் சாலையில் உள்ள ரூ.5.70 கோடி மதிப்புள்ள 7.12 சென்ட் வணிக வளாக கட்டிடம் மற்றும் குடியிருப்பை அறநிலையத் துறையினர் மீட்டனர்.



இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி, கோவில் தக்கார் செல்வம் பெரியசாமி, செயல் அலுவலர் சரவணக்குமார், செயல் அலுவலர்கள் வெற்றிச்செல்வன், பாண்டியராஜ், நாகராஜ், அறநிலையத்துறை ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர் கொண்ட குழு போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த இடம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டை கரிவரத ராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை மீட்கப்பட்ட இடத்தில் ஒட்டப்பட்டது.

கடந்த 8 ஆம் தேதி, கோவை சவுரிபாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் திருக்கோவிலுக்குசொந்தமான ரூபாய் 10 கோடி மதிப்பிலான 27.78 செண்ட் கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...