கோவையில் தான் வளர்த்து வந்த 20க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதாக விவசாயி புகார் - தோல் உரிந்த மாடுகளுக்கு தீவிர சிகிச்சை

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு ரயில்வே கேட் அருகே 4 நாட்களுக்கு முன்னர் சுமார் 20 மேற்பட்ட எருமை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது, மர்ம நபர்கள் மாட்டின் மீது ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு ரயில்வே கேட் அருகே தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2008 முதல் அதே பகுதியில் விவசாயம் செய்து கொண்டு, 40 க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சுமார் 20 மேற்பட்ட எருமை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது, மர்ம நபர்கள் மாட்டின் மீது ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ,நேற்று வழக்கம் போல் பண்ணையில் மாடுகளை பராமரித்து வந்த போது மாடுகளின் தோல் உரிந்து பெரிய காயங்களாக மாறியுள்ளது.



இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில் போட்டி முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...