தொண்டாமுத்தூர் புதுப்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதிய விபத்தில், ராஜமாணிக்கம் (23) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
கோவை: கோவையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் அரசு பேருந்து மீது மோதி ஏற்பட்ட விபத்தில், பைக்கில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (23). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பர்களான அபுதாகீர், வசந்தகுமார் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் தொண்டாமுத்தூர் சென்றுள்ளனர்.
அப்போது தொண்டாமுத்தூர்புதுப்பாளையம் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், படுகாயமடைந்த அபுதாகீர், வசந்தகுமார் ஆகிய இருவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் போலீசார்விபத்தில் பலியான ராஜமாணிக்கம்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மது போதையில் இளைஞர்கள்
அதிவேகமாக வாகனத்தை இயக்கினார்களா? என்பது குறித்துமருத்துவ அறிக்கை வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.