கோவையில் நிலைதடுமாறி இருசக்கர வாகனம் அரசு பேருந்து மீது மோதி விபத்து - இளைஞர் பலி; இருவர் படுகாயம்…!

தொண்டாமுத்தூர் புதுப்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதிய விபத்தில், ராஜமாணிக்கம் (23) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.



கோவை: கோவையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் அரசு பேருந்து மீது மோதி ஏற்பட்ட விபத்தில், பைக்கில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (23). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பர்களான அபுதாகீர், வசந்தகுமார் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் தொண்டாமுத்தூர் சென்றுள்ளனர்.

அப்போது தொண்டாமுத்தூர்புதுப்பாளையம் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், படுகாயமடைந்த அபுதாகீர், வசந்தகுமார் ஆகிய இருவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் போலீசார்விபத்தில் பலியான ராஜமாணிக்கம்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மது போதையில் இளைஞர்கள்

அதிவேகமாக வாகனத்தை இயக்கினார்களா? என்பது குறித்துமருத்துவ அறிக்கை வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...