பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்கக் கோரி மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பவானியை காப்போம் என்ற அமைப்பினை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர் பேட்டியளித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள், மேட்டுப்பாளையம் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் மின்சாரத்திற்காக கூமபாளையம், சமயபுரம் ஆகிய இடங்களில் கதவணை கட்டப்பட்டு இருப்பதை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், ஆலை கழிவுகள் கலப்பதால் ஆற்று நீரை பயன்படுத்தும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது எனவும், கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, கேரளாவில் தேக்குவட்டை உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்டப்படுவதால் பவானி ஆற்றில் தண்ணீர் வருவது முற்றிலும் தடைபட்டு போகும் எனவும், எனவே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...