கடும் பொருளாதார நெருக்கடியில், கோவை ஜாப் ஒர்க் நிறுவனங்கள்..!

கடந்த 2015 ஆண்டுக்கு பின், ஜாப் ஒர்க்குகளுக்கான தொகை உயர்த்தப்படவில்லை. ஜாப் ஒர்க் குறுந்தொழில் கூடங்களை காக்க தவறினால், 30,000 குறுந்தொழில் கூடங்களில் பணியாற்றும் 3 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கும் நிலை ஏற்படும்.


கோவை: எட்டு வருடங்களாக ஜாப் ஒர்க்கில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தபடாத காரணத்தால், கடும் நெருக்கடியில் தத்தளித்து வருகின்றன கோவை ஜாப் ஒர்க்கில் ஈடுபட்டுவரும் குறுந்தொழில் கூடங்கள்.

5% - 12 % ஜி எஸ் டி உயர்வு, மின் கட்டணம், கட்டட வாடகை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு என பிரச்னை மேல் பிரச்சனையை சந்தித்து வரும் குறுதொழிற் கூடங்களுக்கு, 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு பெரு நிறுவனங்கள் ஜாப் ஒர்க் தொகையை உயர்த்தி கொடுக்காததால் பெரும் நெருக்கடியில் உள்ளனர்.

இது குறித்து பேசிய காட்மா சங்கத்தலைவர் சிவகுமார்:



கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரம் குறுந்தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த குறுந்தொழில் கூடங்ககளை பொறுத்தவரையில், பெரும்பாலும் 90 சதவிகிதம் ஜாப் ஒர்க் பணிகளை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.

ஜாப் ஒர்க் என்றால் என்ன..?



ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு பெரு நிறுவனங்கள் இரும்பு, செம்பு, அலுமினியம் உள்ளிட்ட மூலப்பொருட்களை உலோகங்களாக கொடுத்து விடுவார்கள்.



அதனை அவர்களின் தேவைக்கேற்ப உருமாற்றி பம்பு செட், மின் மோட்டார், டெக்ஸ்டைல் இயந்திரங்களின் உதிரிபாகங்கள், கியர் பாக்ஸ், ஆட்டோ மொபைல் மெசினரிஸ்களிக்கான பாகங்களை ஜாப் ஒர்க் தொழில் கூடங்கள் தயாரித்து தருவார்கள்.

இவ்வாறு குறுந்தொழில் கூடங்களில் தயாரிக்கப்படும் சிறு, சிறு பாகங்களை ஒன்று சேர்த்து (assemble) செய்து பெரு நிறுவனங்கள் தங்களுக்கான பிராண்டட் புராடக்டுகளை தயாரித்து சந்தைபடுத்துவர்.

8 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கட்டணம்.

கடந்த 2015 ஆண்டுக்கு பின், ஜாப் ஒர்க்குகளுக்கான ஊதியம் உயர்த்தப்படவில்லை. எட்டு வருடங்களாக இதற்கான கோரிக்கையை முன்வைத்தும், இன்றளவும் குறுந்தொழில் கூடங்களின் கோரிக்கைக்கு, பெரு நிறுவனங்கள் செவி சாய்க்கவில்லை.

விலைவாசி உயர்வால் நெருக்கடியில் தத்தளிக்கும் குறுந்தொழில் கூடங்கள்



ஒரு புறம், ஜாப் ஒர்க் செய்ய கொடுக்கப்படும் தொகை உயராத நிலையில், செலவினங்களோ 2 முதல் 4 மடங்கு வரை அதிகரித்திருக்கின்றன. குறுந்தொழில் கூடங்களின் இயந்திர தேய்மான செலவினம் மற்றும் தொழில் கூடங்கள் இயங்கும் கட்டடத்துக்கான வாடகை இரண்டு முதல் மூன்று மடங்காக அதிகரித்திருக்கின்றன. அதேபோல, 5 சதவிகிதமாக இருந்த ஜி எஸ் டி 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. போக்குவரத்துக்கான பெட்ரோல் டீசல் விலை விண்ணைதொட்டிருக்கும் நிலையில், மின் கட்டனமும் தன் பங்குக்கு ஜாப் ஒர்க் குறுந்தொழில் கூடங்களை பதம் பார்த்திருக்கின்றன.

ஜாப் ஒர்க் கூடங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களின் சம்பளமும் உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த ஜாப் ஒர்க் செலவினங்கள் 2015 ஐ ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகரித்திருக்கின்றன. எனவே, ஜாப் ஒர்க் பணிகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.

30 ஆயிரம் தொழில் கூடங்கள்; 3 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி.



ஜாப் ஒர்க் குறுந்தொழில் கூடங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்ற நிலையில், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கனவே வேலை குறைவாகவே உள்ளதால், ஒடி (OT) என்று சொல்லும் ஓவர் டைமில் வேலை பார்த்து சம்பாதிக்கும் வழக்கம், தற்போது முற்றிலும் நடைமுறையில் இல்லை. சொல்லப்போனால், வாரத்தில் சில நாட்கள் கட்டாய விடுப்பு அறிவிக்கும் நிலை என்பதே நிதர்சனம்.

இனியும், பெரு நிறுவனங்கள் ஜாப் ஒர்க் தொகையை உயர்த்தி கொடுக்காமல் இருந்தால், பொறியியல் பட்டதாரிகள் முதல் படிக்கதோர் வரை பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.



ஜாப் ஒர்க் குறுந்தொழில் கூடங்களை காக்க தவறினால், முப்பதாயிரம் குறுந்தொழில் கூடங்களில் பணியாற்றும் 3 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கும் நிலை ஏற்படும்.

எனவே, 3 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, பெரு நிறுவனங்கள் ஜாப் ஒர்க் தொகையை உயர்த்தி, ஜாப் ஒர்க் குறுந்தொழிலை காக்க முன்வரவேண்டும் என்பதே காட்மா உள்ளிட்ட சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...