கோவையில் மாணவனிடம் கல்வி சான்றிதழை பெற்று மோசடி செய்த கோவை தனியார் நிறுவன உரிமையாளர் கைது…!

சிறந்த கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி, கும்பகோணத்தை சேர்ந்த மாணவரின் 12 ஆம் வகுப்பு சான்றிதழை பெற்றுக்கொண்டு தர மறுத்த, கோவை தனியார் நிறுவனத்தின் உரிமையாளரை போலீசாரை கைது செய்தனர்.



கோவை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ரவிக்குமார். இவரது மகன் அக்னீஸ்வரன் (17). இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அவரிடம் சிறந்த கல்லூரியில் விரும்பும் பாடத்திட்டத்தில் சேர, தாங்கள் உதவி செய்வதாக கூறி கோவை ரத்தினபுரியில் செயல்பட்டு வரும் தனியார் நிர்வாகத்தினர்

தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்.

இதனையடுத்து மாணவர் அக்னீஸ்வரன, பெஸ்ட் எடுகேஷன் சென்டர் (Best education centre) என்ற அந்த நிர்வாகத்தினரிடம்தன்னிடமுள்ள கல்வி அசல் சான்றிதழ்களை அனுப்பினார். இதற்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம் கேட்கப்பட்ட நிலையில், மாணவர் ஆயிரம் ரூபாய் மட்டும் அனுப்பி உள்ளார்.

இந்தநிலையில், நிர்வாகம் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு20 நாட்களை தாண்டியும் மாணவனின் அசல் சான்றிதழ்களை திருப்பி கொடுக்காமலும், கல்லூரியிலும் இடம் வாங்கி கொடுக்கமாலும் இருந்ததுள்ளனர். இதனால் மாணவர் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, தனியார் நிறுவனத்தின் முன்பு அக்னிஸ்வரனின் தந்தை ரவிக்குமார் மற்றும் சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

பின்னர் மாணவரின் தந்தை ரவிக்குமார் ரத்தினபுரி காவல் நிலையத்தில் சான்றிதழ்களை பெற்றுத் தருமாறு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர், விசாரணை மேற்கொணடு, மாணவரின் சான்றிதழை பெற்று திருப்பி கொடுக்காத நிறுவனத்தின் நிறுவனர் செல்வம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர், இது போன்று யாரிடமாவது மோசடி செய்தாரா..?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...