அன்னூர் குடியிருப்பு பகுதியில் இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி என வைக்கப்பட்ட சர்ச்சைக்குறிய அறிவிப்பு பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், பேனரை அகற்றி, பேனர் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: அன்னூரை அடுத்த காடுவெட்டிபாளையம் ஊராட்சியின் குடியிருப்பு பகுதியில் சர்ச்சைக்குறிய அறிவிப்பு பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அந்த பேனரில் “எச்சரிக்கை இது இந்து மக்கள் மட்டும் வாழும் பகுதி இங்கு மதப் பிரச்சாரம் மற்றும் மதக்கூட்டங்கள் போன்றவை நடந்த அனுமதியில்லை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற சர்ச்சைக்குறிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அன்னூர் போலீசார் சர்ச்சைக்குறிய அந்த அறிவிப்பு பேனரை உடனடியாக அங்கிருந்து அகற்றினர்.
மேலும், அந்த பேனர் தொடர்பாக புகார் ஏதும் இல்லாததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், இருப்பினும் பேனர் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பேனரில் “எச்சரிக்கை இது இந்து மக்கள் மட்டும் வாழும் பகுதி இங்கு மதப் பிரச்சாரம் மற்றும் மதக்கூட்டங்கள் போன்றவை நடந்த அனுமதியில்லை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற சர்ச்சைக்குறிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அன்னூர் போலீசார் சர்ச்சைக்குறிய அந்த அறிவிப்பு பேனரை உடனடியாக அங்கிருந்து அகற்றினர்.
மேலும், அந்த பேனர் தொடர்பாக புகார் ஏதும் இல்லாததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், இருப்பினும் பேனர் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.