வார்டு 45: குப்பைகளை அகற்றும் பணிகள் சீராக நடைபெறுகிறதா..? - ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் கலந்துரையாடல்

கோவை வார்டு 45க்கு உட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் மு.பிரதாப் மக்களிடம் குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அன்னை சத்யா நகரில் அமையவுள்ள நகர் நல மைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 45 ஆவது வார்டுக்குட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் உள்ள, சின்னசுப்பண்ணா வீதியில் மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, பொதுமக்களின் வீடுகளுக்கு சென்ற அவர் குடிநீர் விநியோகம் சீரான முறையில் செய்யப்படுகிறதா..? பொது இடங்களில் தினமும் தூய்மை பணியாளர்கள் பணிகளை முறையாக செய்கிறார்களா? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், குறைகள் ஏதேனும் இருந்தால் தயக்கமின்றி தெரிவிக்கலாம், எனக் கூறினார்.



பின்னர், குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கும் போது கட்டாயமாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும், அப்போது தான் மறு சுழற்சி உள்ளிட்ட பணிகளை முழுமையாக செய்ய முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதைதொடர்ந்து, அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடிய மாநகராட்சி ஆணையாளர், குப்பை தரம் பிரித்து சேகரிப்பது குறித்து கேட்டறிந்தார்.



இதையடுத்து, சாய்பாபா காலணி, அன்னை சத்யா நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள நகர் நல மைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...