வார்டு 45: குப்பைகளை அகற்றும் பணிகள் சீராக நடைபெறுகிறதா..? - ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் கலந்துரையாடல்

கோவை வார்டு 45க்கு உட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் மு.பிரதாப் மக்களிடம் குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அன்னை சத்யா நகரில் அமையவுள்ள நகர் நல மைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 45 ஆவது வார்டுக்குட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் உள்ள, சின்னசுப்பண்ணா வீதியில் மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, பொதுமக்களின் வீடுகளுக்கு சென்ற அவர் குடிநீர் விநியோகம் சீரான முறையில் செய்யப்படுகிறதா..? பொது இடங்களில் தினமும் தூய்மை பணியாளர்கள் பணிகளை முறையாக செய்கிறார்களா? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், குறைகள் ஏதேனும் இருந்தால் தயக்கமின்றி தெரிவிக்கலாம், எனக் கூறினார்.



பின்னர், குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கும் போது கட்டாயமாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும், அப்போது தான் மறு சுழற்சி உள்ளிட்ட பணிகளை முழுமையாக செய்ய முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதைதொடர்ந்து, அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடிய மாநகராட்சி ஆணையாளர், குப்பை தரம் பிரித்து சேகரிப்பது குறித்து கேட்டறிந்தார்.



இதையடுத்து, சாய்பாபா காலணி, அன்னை சத்யா நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள நகர் நல மைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...