திருப்பூரில் திருட்டுப் போன 108 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

இன்று 108 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதையடுத்து, தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையர் பிரபாகரன் வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.


திருப்பூர்: கடந்த நான்கு மாதங்களில், திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 108 செல்போன்கள் திருடப்பட்டதாகவும் மற்றும் காணாமல் போனதாக வெவ்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



திருட்டுப் போன செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பங்களுடன் தீவிர விசாரனை மேற்கொண்டதில், வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அந்த செல்போன்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் தொலைந்து போன அனைத்து செல் போன்களையும் கண்டுபிடித்தனர்.



இன்று 108 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இதையடுத்து செல்போன்களை கைப்பற்றிய தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையர் பிரபாகரன் வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...