ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரை அரசு கல்வி தொலைக்காட்சியின் CEO-வாக நியமிப்பதா..? - கோவையில் கேம்பஸ் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்

தேர்வான மணிகண்டபூபதி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்றும் அவரை தேர்வு செய்வது குறித்து முன்பே தீர்மானிக்கப்பட்டது என குற்றம்சாட்டி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கான பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலக்கட்டத்தில் இந்த தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது, அரசு கல்வி தொலைக்காட்சிக்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நேர்காணல் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மணிகண்ட பூபதி புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், தேர்வான மணிகண்டபூபதி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்றும் அவரை தேர்வு செய்வது குறித்து முன்பே தீர்மானிக்கப்பட்டது என குற்றம்சாட்டி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின், மாவட்ட தலைவர் ஆசிக் அஹமது தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், நியமனத்திற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அப்பதவிக்கு பலர் விண்ணப்பித்தும், யாரையும் நேர்காணலுக்கு அழைக்காமல், தமிழக அரசு நிராகரித்துள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும், தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகிறதா..? என சந்தேகம் எழுவதாகவும் விமர்சித்தனர்.

எனவே, உடனடியாக மணிகண்டபூபதியின் நியமனத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...