கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அரசு திட்டங்கள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 4 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



இக்கூட்டத்தில் பேசிய கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவகர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இயங்கும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை போலவே அதிக மதிப்பெண் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

"பள்ளிப்படிப்பை முடித்து வெளியில் சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு போதிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும். ஏற்கனவே இப்பள்ளிகளில் பயின்று தற்பொழுது உயர்ந்த நிலையில் உள்ள நபர்களை அழைத்து உரையாற்ற செய்வதன் மூலம் மாணவர்களிடம் தன்னம்பிக்கை அதிகரித்து, கல்வியில் சிறந்தவர்களாக விளங்கி பொருளாதார அளவில் உயர்ந்த நிலையினை அடைய பயனுள்ளதாக அமையும்", எனவும் தெரிவித்தார்.

தாட்கோ திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், வணிகத்தை உருவாக பொருளாதார உதவி மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த சிகிச்சையகம், ஆதிதிராவிடர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், இத்தகைய திட்டங்களை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மண்டல தாட்கோ செயற்பொறியாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...