கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் 180 ஊழியர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், மாணவர்களின் ஆரோக்கியம் தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கோவை: வால்பாறை சுற்றுவட்டாரத்தில் உள்ள 90 பள்ளிகள் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
நகராட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர் என 180க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், நகராட்சி மேலாளர் ஜலாவுதீன் கலந்து கொண்டு, பள்ளி குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், உணவு சமையல் செய்தவுடன் ஊழியர்கள் சாப்பிட்டு பார்த்து பின்பு பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும், என அறிவுறுத்தினார்.

இதேபோல், பள்ளி குழந்தைகளுக்கு கொதிக்க வைத்த தண்ணீரை அருந்த கொடுக்க வேண்டும் என்றும், வாரம் ஒரு முறை தண்ணீர் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீரை சுத்தம் செய்து புதிய தண்ணீர் பயன்படுத்தி சமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், சுத்தமான காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை கொண்டு சமைத்த உணவை மட்டுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
நகராட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர் என 180க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், நகராட்சி மேலாளர் ஜலாவுதீன் கலந்து கொண்டு, பள்ளி குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், உணவு சமையல் செய்தவுடன் ஊழியர்கள் சாப்பிட்டு பார்த்து பின்பு பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும், என அறிவுறுத்தினார்.
இதேபோல், பள்ளி குழந்தைகளுக்கு கொதிக்க வைத்த தண்ணீரை அருந்த கொடுக்க வேண்டும் என்றும், வாரம் ஒரு முறை தண்ணீர் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீரை சுத்தம் செய்து புதிய தண்ணீர் பயன்படுத்தி சமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், சுத்தமான காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை கொண்டு சமைத்த உணவை மட்டுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.