கோவை கே.ஜி.சாவடி அடுத்த பிச்சனூர் பகுதியில் கிருத்திக் என்ற 7 வயது சிறுவன், வீட்டில் இருந்த வாட்டர் ஹீட்டரை பிடித்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை பிச்சனூர் அருகே தண்ணீர் ஹீட்டரை பிடித்த 7 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கே.ஜி.சாவடி அடுத்த பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்- பேபி, தம்பதியினர்.

இவர்களுக்கு கிருத்திக் என்ற 7 வயது மகன் உள்ளான். கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் ராமன் உயிரிழந்ததால், கிருத்திக் தனது தாயுடன் பாட்டி விட்டில் தங்கி, பிச்சனூர் அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பட்டி ராமாத்தாள் வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் சூடு செய்ய ஹீட்டர் கருவியை பயன்படுத்தியுள்ளார். அப்போது, ஹீட்டர் அருகே கிருத்திக் அமர்ந்திருந்ததாக தெரிகிறது.

இதனிடையே, ராமாத்தாள் வீட்டிற்கு வெளியே சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்த போது, வாட்டர் ஹீட்டரை பிடித்தவாறு மின்சாரம் பாய்ந்து சிறுவன் கிருத்திக் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமாத்தாள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு திருமலையாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு கிருத்திக்கை பரிசோதனைச் செய்த மருத்துவர்கள் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி, மேல் சிகிச்சைக்காக மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாய் பேபி கொடுத்த புகார் அடிப்படையில் கே.ஜி.சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவன் இறந்து 3 மாதங்களே ஆன நிலையில், மகனும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களை சொல்லிலடங்கா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை கே.ஜி.சாவடி அடுத்த பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்- பேபி, தம்பதியினர்.
இவர்களுக்கு கிருத்திக் என்ற 7 வயது மகன் உள்ளான். கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் ராமன் உயிரிழந்ததால், கிருத்திக் தனது தாயுடன் பாட்டி விட்டில் தங்கி, பிச்சனூர் அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பட்டி ராமாத்தாள் வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் சூடு செய்ய ஹீட்டர் கருவியை பயன்படுத்தியுள்ளார். அப்போது, ஹீட்டர் அருகே கிருத்திக் அமர்ந்திருந்ததாக தெரிகிறது.
இதனிடையே, ராமாத்தாள் வீட்டிற்கு வெளியே சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்த போது, வாட்டர் ஹீட்டரை பிடித்தவாறு மின்சாரம் பாய்ந்து சிறுவன் கிருத்திக் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமாத்தாள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு திருமலையாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு கிருத்திக்கை பரிசோதனைச் செய்த மருத்துவர்கள் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி, மேல் சிகிச்சைக்காக மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாய் பேபி கொடுத்த புகார் அடிப்படையில் கே.ஜி.சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவன் இறந்து 3 மாதங்களே ஆன நிலையில், மகனும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களை சொல்லிலடங்கா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.