கோவையில் சுதந்திர தினத்தன்று மதுபான விற்பனையில் ஈடுபட்ட 44 பேர் கைது – 797 மதுப்பாட்டிகள் பறிமுதல் - எஸ்.பி நடவடிக்கை

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின்படி நடத்திய சோதனையில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 797 மது பாட்டில்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்த 44 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: நேற்று 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மது விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். தடையை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தடையை மீறி மது விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் நபர்களை கண்காணிக்க, கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல்துறையினர்களும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 44 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 797 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...