கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின்படி நடத்திய சோதனையில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 797 மது பாட்டில்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்த 44 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: நேற்று 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மது விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். தடையை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தடையை மீறி மது விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் நபர்களை கண்காணிக்க, கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல்துறையினர்களும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 44 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 797 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடையை மீறி மது விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் நபர்களை கண்காணிக்க, கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல்துறையினர்களும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 44 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 797 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.