75வது சுதந்திர தினவிழாவையொட்டி, “சுதந்திர வனம்” என்ற பெயரில் மரம் நடும் நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். வெ. கீதாலட்சுமி துவக்கி வைத்து 76 அரியவகை செடிகளை நடவு செய்தார்.
கோவை: நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுதந்திர வனம்” என்ற தலைப்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவையில் உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர். வெ. கீதாலட்சுமி கலந்து கொண்டு தமிழ்நாட்டின் மாநில மரமான பனை விதைகளை நடவு செய்து சுதந்திர வனத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், அங்கு அமைக்கப்பட்ட 20 வகையான ரோஜாக்களைக் கொண்ட ரோஜா தோட்டத்தினை பல்கலைக் கழக துணைவேந்தர் தொடங்கி வைத்து பேசிய துணைவேந்தர், "இந்த "சுதந்திர வனம்" மற்றும் ரோஜா தோட்டம் ஆகியவை இயற்கை ஆர்வலர்கள், தாவரவியலாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வில், சுற்றுச் சூழல் ஆர்வலர் எம்.யோகநாதன் கலந்துகொண்டு, நாவல் மரக்கன்றை நடவு செய்தார். இதேபோல், இந்த நிகழ்வில் பறவைகள் மற்றும் தேனீக்களை ஈர்க்கும் வகையிலான 76 விதமான அரிய வகை செடிகள் நடவு செய்யப்பட்டன.

இந்த மரம் நடும் நிகழ்வை வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலைத்துறை முதன்மையர் முனைவர். பெ. ஐரிலர் வேதமணி மற்றும் மலரியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரான ராஜாமணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
கோவையில் உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர். வெ. கீதாலட்சுமி கலந்து கொண்டு தமிழ்நாட்டின் மாநில மரமான பனை விதைகளை நடவு செய்து சுதந்திர வனத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், அங்கு அமைக்கப்பட்ட 20 வகையான ரோஜாக்களைக் கொண்ட ரோஜா தோட்டத்தினை பல்கலைக் கழக துணைவேந்தர் தொடங்கி வைத்து பேசிய துணைவேந்தர், "இந்த "சுதந்திர வனம்" மற்றும் ரோஜா தோட்டம் ஆகியவை இயற்கை ஆர்வலர்கள், தாவரவியலாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வில், சுற்றுச் சூழல் ஆர்வலர் எம்.யோகநாதன் கலந்துகொண்டு, நாவல் மரக்கன்றை நடவு செய்தார். இதேபோல், இந்த நிகழ்வில் பறவைகள் மற்றும் தேனீக்களை ஈர்க்கும் வகையிலான 76 விதமான அரிய வகை செடிகள் நடவு செய்யப்பட்டன.
இந்த மரம் நடும் நிகழ்வை வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலைத்துறை முதன்மையர் முனைவர். பெ. ஐரிலர் வேதமணி மற்றும் மலரியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரான ராஜாமணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.