'சுதந்திர வனம்‌': கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் மரம் நடும் விழா

75வது சுதந்திர தினவிழாவையொட்டி, “சுதந்திர வனம்‌” என்ற பெயரில் மரம் நடும் நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்‌. வெ. கீதாலட்சுமி துவக்கி வைத்து 76 அரியவகை செடிகளை நடவு செய்தார்.


கோவை: நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுதந்திர வனம்‌” என்ற தலைப்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் உள்ள தாவரவியல்‌ பூங்காவில்‌ நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர்‌. வெ. கீதாலட்சுமி கலந்து கொண்டு தமிழ்நாட்டின் மாநில மரமான பனை விதைகளை நடவு செய்து சுதந்திர வனத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், அங்கு அமைக்கப்பட்ட 20 வகையான ரோஜாக்களைக்‌ கொண்ட ரோஜா தோட்டத்தினை பல்கலைக் கழக துணைவேந்தர் தொடங்கி வைத்து பேசிய துணைவேந்தர், "இந்த "சுதந்திர வனம்‌" மற்றும்‌ ரோஜா தோட்டம் ஆகியவை இயற்கை ஆர்வலர்கள்‌, தாவரவியலாளர்கள்‌, விஞ்ஞானிகள்‌, மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ விதமாக அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வில், சுற்றுச்‌ சூழல்‌ ஆர்வலர்‌ எம்‌.யோகநாதன்‌ கலந்துகொண்டு, நாவல்‌ மரக்கன்றை நடவு செய்தார்‌. இதேபோல், இந்த நிகழ்வில் பறவைகள்‌ மற்றும்‌ தேனீக்களை‌ ஈர்க்கும் வகையிலான 76 விதமான அரிய வகை செடிகள் நடவு செய்யப்பட்டன.



இந்த மரம் நடும் நிகழ்வை வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலைத்துறை முதன்மையர் முனைவர்‌. பெ. ஐரிலர்‌ வேதமணி மற்றும் மலரியல்‌ துறை பேராசிரியர் மற்றும் தலைவரான ராஜாமணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...