ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் "உங்களைத் தேடி நூலகம்" திட்டத்தின் கீழ் நடமாடும் நூலகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா இன்று திறந்து வைத்தார்.
கோவை: கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில்" உங்களைத் தேடி நூலகம் " திட்டத்தின் கீழ் நடமாடும் நூலகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா இன்று திறந்து வைத்தார்.

முதல் கட்டமாக, இந்த நடமாடும் நூலக வாகனம் கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், குறிப்பாக அரசு பள்ளிகளுக்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், இந்தியா வரலாறு குறித்த புத்தகங்கள், தமிழ் இலக்கணம் சார்ந்த புத்தகங்கள் தமிழ் வரலாற்று புத்தகங்கள், பள்ளி சிறுவர்களுக்கான கதைகள் ஆகிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி கலையரங்கத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கோயமுத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு காசோலையும், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் சமீரன் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

முதல் கட்டமாக, இந்த நடமாடும் நூலக வாகனம் கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், குறிப்பாக அரசு பள்ளிகளுக்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், இந்தியா வரலாறு குறித்த புத்தகங்கள், தமிழ் இலக்கணம் சார்ந்த புத்தகங்கள் தமிழ் வரலாற்று புத்தகங்கள், பள்ளி சிறுவர்களுக்கான கதைகள் ஆகிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி கலையரங்கத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கோயமுத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு காசோலையும், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் சமீரன் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.