கோவை மாகாளியம்மன் கோவிலில் 5 டன் காய்கறிகளை கொண்டு தேசியக்கொடி அலங்காரம்..!

இந்த அலங்காரத்தில் திருக்கோவில் முன்பாக காய்கறிகளால் தேசிய கொடிகம்பம் அமைக்கப்பட்டு தேசிய கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.



கோவை: கோவை பெரியகடை வீதி பகுதியிலுள்ள மாகாளியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆடி வெள்ளி கிழமையும் சிறப்பான அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் இன்று ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 5 டன் எடையிலான காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.



இந்த அலங்காரத்தில் திருக்கோவில் முன்பாக காய்கறிகளால் தேசிய கொடிகம்பம் அமைக்கப்பட்டு தேசிய கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.



அதேபோல் கோவில் வளாகம் முழுவதும் தேசிய கொடி அமைப்பை போன்று மூவர்ணத்தில் அசோக சக்கரத்துடனான அலங்காரம் செய்யப்பட்டதுடன் அம்மனுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.



ஆடி மாத கடைசி வெள்ளி கிழமையில் வழிபாட்டுக்கு வந்த பக்தர்களை காட்டிலும், காய்கறிகளால் செய்யப்பட்ட அலங்காரத்தை காணவே ஏராளமான மக்கள் மாகாளியம்மன் கோவிலுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்து சென்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...