இந்த அலங்காரத்தில் திருக்கோவில் முன்பாக காய்கறிகளால் தேசிய கொடிகம்பம் அமைக்கப்பட்டு தேசிய கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
கோவை: கோவை பெரியகடை வீதி பகுதியிலுள்ள மாகாளியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆடி வெள்ளி கிழமையும் சிறப்பான அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 5 டன் எடையிலான காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்த அலங்காரத்தில் திருக்கோவில் முன்பாக காய்கறிகளால் தேசிய கொடிகம்பம் அமைக்கப்பட்டு தேசிய கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
அதேபோல் கோவில் வளாகம் முழுவதும் தேசிய கொடி அமைப்பை போன்று மூவர்ணத்தில் அசோக சக்கரத்துடனான அலங்காரம் செய்யப்பட்டதுடன் அம்மனுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
ஆடி மாத கடைசி வெள்ளி கிழமையில் வழிபாட்டுக்கு வந்த பக்தர்களை காட்டிலும், காய்கறிகளால் செய்யப்பட்ட அலங்காரத்தை காணவே ஏராளமான மக்கள் மாகாளியம்மன் கோவிலுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்து சென்றனர்.