கோவையில் 'உணவு திருவிழா' - இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 50-வகை இட்லி, விதவிதமான கீரைகளுடன் அசத்தலான உணவுகள்..!

உணவு திருவிழாவில் நவதானியங்கள், கீரை வகைகள் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்கள் இடம் பெற்றிருந்தன. மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் உணவு திருவிழாவில் இடம் பெற்றிருந்த நவதானிய உணவு பொருட்களை சுவைத்தனர்.


கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்பு துறை நடத்திய நவதானியங்களால் ஆன உணவுத் திருவிழா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

கோவை நவ இந்தியா அருகே உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் உகந்த உணவுத் திருவிழா என்ற தலைப்பில் நவதானியங்களால் ஆன உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவில் நவதானியங்கள், கீரை வகைகள் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.



மேலும் ஆட்சியரும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் உணவுத் திருவிழாவில் இடம் பெற்றிருந்த நவதானிய உணவு பொருட்களை சுவைத்தனர்.



இந்த உணவுத் திருவிழாவில் கம்பு கேழ்வரகு ராகி மக்காச்சோளம் போன்ற பல வகையான தானியங்களால் ஆன இட்லி, தோசை, கேக், வடை போன்ற பல வகையான உணவுகள் இடம் பெற்றிருந்தன. அதேபோல் 50 வகையான இட்லிகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.



இந்த உணவுத் திருவிழாவில் கேட்டரிங் மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நலத்துறை பெண் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...