75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி நகராட்சி சார்பில் உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சியில் நகராட்சி சார்பில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளிகள் படிக்கும் சுமார் 40 மாணவ மாணவிகளுக்கு, துணியால் செய்யப்பட்ட தேசிய கொடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் மற்றும் திமுக நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் தலைமை ஏற்று மாணவர்களுக்கு கொடிகளை வழங்கினர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் தர்மராஜ், ஆறுச்சாமி, தங்கவேல், நகர் மன்ற கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைத்து மாணவரும் மாணவிகளும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அவரவர் வீடுகளில் இந்த தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தில் சமையலறை, வகுப்பறைகள், போன்ற பகுதிகளில் நகராட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு பணியாற்றும் சத்துணவு ஊழியர்களிடம் குழந்தைகளுக்குச் சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என்றும், சமையலறை உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளிகள் படிக்கும் சுமார் 40 மாணவ மாணவிகளுக்கு, துணியால் செய்யப்பட்ட தேசிய கொடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் மற்றும் திமுக நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் தலைமை ஏற்று மாணவர்களுக்கு கொடிகளை வழங்கினர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் தர்மராஜ், ஆறுச்சாமி, தங்கவேல், நகர் மன்ற கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைத்து மாணவரும் மாணவிகளும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அவரவர் வீடுகளில் இந்த தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தில் சமையலறை, வகுப்பறைகள், போன்ற பகுதிகளில் நகராட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு பணியாற்றும் சத்துணவு ஊழியர்களிடம் குழந்தைகளுக்குச் சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என்றும், சமையலறை உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.