உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகம் பொறித்த முகமூடி அணிந்து பேரணி..!

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் வனத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் யானையின் வடிவில் முகமூடிகள் அணிந்து, பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.



கோவை: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகம் பொறித்த முகமூடி அணிந்து பேரணி நடைபெற்றது.

உலக யானைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட வனத்துறை சார்பில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகம் பொறித்த முகமூடியை அணிந்து பேரணி நடைபெற்றது.



வடகோவை பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது ஆர்.எஸ்.புரம், லாலி ரோடு வழியாக மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்த பேரணியை கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் பல்வேறு பள்ளி கல்லூரி, (எஸ்.என்.எஸ் கல்லூரி, ரத்தினம் கல்லூரி, சிந்தி வித்யாலயா பள்ளி) மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் யானை முகம் பொறித்த முகமூடியை அணிந்தும் யானைகள் குறித்த பதாகைகள் யானைகளை பாதுகாக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், யானைகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேரும் வகையிலும் யானைகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை தெரியப்படுத்தும் வகையிலும் இந்நாள் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்.

யானைகள் இருந்தால் வனமும் வளமாக இருக்கும் என தெரிவித்தார். சமீப காலத்தில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். இயற்கையாக இல்லாமல் யானைகள் உயிரிழந்திருந்தால் அதனை கண்டறிந்து தடுக்கவும் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.



யானைகள் ரயில்கள் மோதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அதனை தடுக்க ரயில்வே துறையும் ஒத்துழைப்பு நல்கி வருவதாக தெரிவித்தார். மேலும் ரயில் பாதையில் யானைகள் நடமாடும் இடத்தில் மின் விளக்குகள் பொருத்த பட்டுள்ளதாகவும் வனத்துறையை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...