உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகம் பொறித்த முகமூடி அணிந்து பேரணி..!

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் வனத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் யானையின் வடிவில் முகமூடிகள் அணிந்து, பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.



கோவை: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகம் பொறித்த முகமூடி அணிந்து பேரணி நடைபெற்றது.

உலக யானைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட வனத்துறை சார்பில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகம் பொறித்த முகமூடியை அணிந்து பேரணி நடைபெற்றது.



வடகோவை பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது ஆர்.எஸ்.புரம், லாலி ரோடு வழியாக மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்த பேரணியை கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் பல்வேறு பள்ளி கல்லூரி, (எஸ்.என்.எஸ் கல்லூரி, ரத்தினம் கல்லூரி, சிந்தி வித்யாலயா பள்ளி) மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் யானை முகம் பொறித்த முகமூடியை அணிந்தும் யானைகள் குறித்த பதாகைகள் யானைகளை பாதுகாக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், யானைகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேரும் வகையிலும் யானைகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை தெரியப்படுத்தும் வகையிலும் இந்நாள் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்.

யானைகள் இருந்தால் வனமும் வளமாக இருக்கும் என தெரிவித்தார். சமீப காலத்தில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். இயற்கையாக இல்லாமல் யானைகள் உயிரிழந்திருந்தால் அதனை கண்டறிந்து தடுக்கவும் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.



யானைகள் ரயில்கள் மோதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அதனை தடுக்க ரயில்வே துறையும் ஒத்துழைப்பு நல்கி வருவதாக தெரிவித்தார். மேலும் ரயில் பாதையில் யானைகள் நடமாடும் இடத்தில் மின் விளக்குகள் பொருத்த பட்டுள்ளதாகவும் வனத்துறையை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.





Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...