உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகம் பொறித்த முகமூடி அணிந்து பேரணி..!

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் வனத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் யானையின் வடிவில் முகமூடிகள் அணிந்து, பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.



கோவை: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகம் பொறித்த முகமூடி அணிந்து பேரணி நடைபெற்றது.

உலக யானைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட வனத்துறை சார்பில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகம் பொறித்த முகமூடியை அணிந்து பேரணி நடைபெற்றது.



வடகோவை பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது ஆர்.எஸ்.புரம், லாலி ரோடு வழியாக மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்த பேரணியை கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் பல்வேறு பள்ளி கல்லூரி, (எஸ்.என்.எஸ் கல்லூரி, ரத்தினம் கல்லூரி, சிந்தி வித்யாலயா பள்ளி) மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் யானை முகம் பொறித்த முகமூடியை அணிந்தும் யானைகள் குறித்த பதாகைகள் யானைகளை பாதுகாக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், யானைகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேரும் வகையிலும் யானைகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை தெரியப்படுத்தும் வகையிலும் இந்நாள் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்.

யானைகள் இருந்தால் வனமும் வளமாக இருக்கும் என தெரிவித்தார். சமீப காலத்தில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். இயற்கையாக இல்லாமல் யானைகள் உயிரிழந்திருந்தால் அதனை கண்டறிந்து தடுக்கவும் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.



யானைகள் ரயில்கள் மோதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அதனை தடுக்க ரயில்வே துறையும் ஒத்துழைப்பு நல்கி வருவதாக தெரிவித்தார். மேலும் ரயில் பாதையில் யானைகள் நடமாடும் இடத்தில் மின் விளக்குகள் பொருத்த பட்டுள்ளதாகவும் வனத்துறையை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.





Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...