கோவை அவினாசி சாலையில் திமுக போஸ்டர்களை அகற்ற கோரி பாஜகவினர் தர்ணா - போலீசார் குவிப்பு - பரபரப்பு…!

அவினாசி சாலையில் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்ற வலியுறுத்தி, பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு திமுகவினரும் கூடியதால், போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை அவினாசி சாலையில் திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற கோரி பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் திமுக சார்பில் கடந்த ஜூலை 13 தேதி தமிழக முதல்வர் கோவை வருவதாக இருந்த போது அவரை வரவேற்க அரசின் சாதனை விளக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

ஆனால் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், முதல்வர் வருகை வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் மேல்பாலம் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவினாசி சாலையில், திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்படாததால், நேற்று பாஜகவினர் அவினாசி சாலை மேம்பாலத் தூண்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற வந்தனர்.



அப்போது, அங்கு திமுகவினரும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



இரு தரப்பினரிடையே, கைகலப்பு சூழல் ஏற்பட்ட நிலையில் போலீசார் இரு தரப்பினரையும் நீண்ட நேரத்திற்கு பிறகு கலைத்தனர்.

இந்நிலையில், பாஜகவினர் சாலை ஓரத்தில் அமர்ந்து போஸ்டர்களை அகற்ற கோரி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.



அங்கு திமுகவினரும் கூடியதால், போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.



இதனால், அவினாசி சாலை பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...