அவினாசி சாலையில் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்ற வலியுறுத்தி, பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு திமுகவினரும் கூடியதால், போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை அவினாசி சாலையில் திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற கோரி பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் திமுக சார்பில் கடந்த ஜூலை 13 தேதி தமிழக முதல்வர் கோவை வருவதாக இருந்த போது அவரை வரவேற்க அரசின் சாதனை விளக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
ஆனால் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், முதல்வர் வருகை வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் மேல்பாலம் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவினாசி சாலையில், திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்படாததால், நேற்று பாஜகவினர் அவினாசி சாலை மேம்பாலத் தூண்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற வந்தனர்.

அப்போது, அங்கு திமுகவினரும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரு தரப்பினரிடையே, கைகலப்பு சூழல் ஏற்பட்ட நிலையில் போலீசார் இரு தரப்பினரையும் நீண்ட நேரத்திற்கு பிறகு கலைத்தனர்.
இந்நிலையில், பாஜகவினர் சாலை ஓரத்தில் அமர்ந்து போஸ்டர்களை அகற்ற கோரி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு திமுகவினரும் கூடியதால், போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், அவினாசி சாலை பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் திமுக சார்பில் கடந்த ஜூலை 13 தேதி தமிழக முதல்வர் கோவை வருவதாக இருந்த போது அவரை வரவேற்க அரசின் சாதனை விளக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
ஆனால் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், முதல்வர் வருகை வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் மேல்பாலம் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவினாசி சாலையில், திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்படாததால், நேற்று பாஜகவினர் அவினாசி சாலை மேம்பாலத் தூண்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற வந்தனர்.
அப்போது, அங்கு திமுகவினரும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரு தரப்பினரிடையே, கைகலப்பு சூழல் ஏற்பட்ட நிலையில் போலீசார் இரு தரப்பினரையும் நீண்ட நேரத்திற்கு பிறகு கலைத்தனர்.
இந்நிலையில், பாஜகவினர் சாலை ஓரத்தில் அமர்ந்து போஸ்டர்களை அகற்ற கோரி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு திமுகவினரும் கூடியதால், போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், அவினாசி சாலை பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.