கோவை கணபதி புதூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான பாலசுப்பிரமணியம் (50) என்பவர், 8 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறினால் குடும்பத்தினரை கொன்று விடுவதாக அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.
கோவை: கோவை அரசு பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் கொடுமை அளித்த கட்டிட தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை கணபதி புதூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான பாலசுப்பிரமணியம்(50) என்பவர், திருமணம் ஆகாமல் தனியாக இருந்து வந்ததால் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறினால் குடும்பத்தினரை கொன்று விடுவதாக பாலசுப்பிரமணியம் அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட சைல்டுலைன் அமைப்பினர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு பாலசுப்பிரமணியம் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கணபதி புதூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான பாலசுப்பிரமணியம்(50) என்பவர், திருமணம் ஆகாமல் தனியாக இருந்து வந்ததால் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறினால் குடும்பத்தினரை கொன்று விடுவதாக பாலசுப்பிரமணியம் அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட சைல்டுலைன் அமைப்பினர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு பாலசுப்பிரமணியம் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.