போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை..!

போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல், உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, தொடர்பாக அனைத்து கோணங்களிலும் காவல் துறை மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்படுவதாகவும் போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



கோவை: கோவையில் நடைபெற்ற போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஆட்சியர் சமீரன், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறும் போது:-

போதை பொருட்கள் விற்பனைக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல், உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, தொடர்பாக அனைத்து கோணங்களிலும் காவல் துறை மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்படுகிறது.

கஞ்சா விற்பனையை தடுக்க, எங்கிருந்து கஞ்சா அனுப்பப்படுகிறது என்பதைக் கண்டறிய இரண்டு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படையினர் பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே2 தருணங்களில் சுமார் 20 கிலோவுக்கு மேல் கஞ்சா பிடிபட்டு விசாரணை நடந்து வருகிறது.

கல்லூரி, பள்ளிகள் அருகே போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பழக்கத்தைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் கடந்த மாதம் கல்லூரி, பள்ளியில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 812 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு புறம் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...