75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
கோவை: 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல் படை, என்சிசி மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு நடைபெறும் இதனை மாவட்ட ஆட்சியர் ஏற்று கொள்வார்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சி கோவை உப்பிலி பாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் மாணவ, மாணவிகள்ஒத்திகை நடத்தினர்.


இதில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல் படை, என்சிசி மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு நடைபெறும் இதனை மாவட்ட ஆட்சியர் ஏற்று கொள்வார்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சி கோவை உப்பிலி பாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் மாணவ, மாணவிகள்ஒத்திகை நடத்தினர்.