'CPI 25-வது மாநில மாநாடு'- ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் பாஜக; திருப்பூரில் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கடும் தாக்கு..!

பாஜக ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்துவதாகவும், நாடு ஒன்று பட வேண்டுமானால் பாஜகவின் கருத்து எதிர்க்கப்பட வேண்டும். பாஜக மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்துகிறது என தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள சந்திராபுரம் பகுதியில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்றது.



இம்மாநாட்டில் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இறுதி நாள் நிகழ்வில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.



இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மூன்றாவது முறையாக முத்தரசனும், மாநில கட்டுப்பாட்டு குழு தலைவராக திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயனும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா அறிவித்தார்.



இதனை அடுத்து மாநாட்டின் இறுதி நிகழ்வாக திருப்பூர் யூனியன் மில் சாலையிலிருந்து அமர்ஜோதி நகர் பத்மினி கார்டன் வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் செந்தொண்டர் பேரணியாக கையில் செங்கொடி ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.



பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா பேசும் போது ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே வரி என ஒற்றைப் பரிமாண நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது.

பாஜக ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்துவதாகவும், நாடு ஒன்றுபட வேண்டும் என்றால் பாஜகவின் கருத்து எதிர்க்கப்பட வேண்டும். மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது எனவும் 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என இ.கம்யூ கருதுகிறது.

இது வரலாற்றுத் தேவை. பாஜக வெற்றி பெற்றால் அது பேரிடி எனவும், பாஜக ஆட்சியில் நாடு அழிகிறது. பாஜகவை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள் ஒன்றுபட வேண்டும். ஆளுநர்களுக்கு என்ன தேவை என இ.கம்யூ கேட்கிறது. ஆனால் பாஜக மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்துகிறது.

பீகாரில் அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெற்ற நிலையில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக உறவை துண்டித்து, பாஜக கூட்டணி மக்களுக்குத் துரோகம் என வெளியேறியுள்ளார். நாடு காப்பாற்ற அரசியல் சாசனம், ஜனநாயகம், காப்பாற்ற பாஜக அகற்றப்படவேண்டும்.

அதற்கு ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு முன்வர வேண்டும். அதிகார பலம் பணம் பலம் வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. இதனை மக்களுக்காக உள்ள கட்சிகள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக பேசினார்.

இதற்குப் பின் மூன்றாவது முறையாக மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள முத்தரசன் பேசும் போது தன்னை மீண்டும் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுத்த மாநில பிரதிநிதிகளுக்கும், தேசிய பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர் மத்திய அரசின் தவறான கொள்கைகள், விலைவாசி உயர்வு, மின்சாரத்தைத் தனியாருக்கு விற்பதற்கு ஏதுவாக கொண்டு வர உள்ள மின்சார சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை எதிர்த்து வருகிற 30-ஆம் தேதி மாநில தழுவிய மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...