கோவை போத்தனூர் அருகே மொஹரம் பண்டிகையை துக்க நிகழ்வாக அனுசரித்த ஷியா இஸ்லாமியர்கள்

கோவை போத்தனூர் பகுதியில் ஷியா பிரிவை சார்ந்த இஸ்லாமிய இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் அரபு மொழியில் துக்கப் பாடல்கள் பாடி வழிபட்டனர். தொழுகைக்குப் பின், இளைஞர்கள் அவர்களது உடலில் ரத்தம் வழிய மார்பில் அடித்துக் கொண்டு மொஹரம் பண்டிகையை துக்க நிகழ்வாக அனுசரித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் அருகே ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மொஹரம் பண்டிகையை உடலில் ரத்தம் வழிய அடித்துக் கொண்டு துக்க நிகழ்வாக அனுசரித்தனர்.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் மொஹரம் பண்டிகை இன்று அனுசரிக்கப்படுகிறது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



இதில், இஸ்லாமிய நாள் காட்டியின்படி முதல் மாதமான மொஹரம் மாதத்தின் பத்தாம் தேதி இமாம் உசேன் மறைவினை நினைவு கூறும் விதமாக ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள், மொஹரம் பண்டிகையை துக்க நிகழ்வாக அனுசரித்து வருகின்றனர்.



இந்த நிகழ்வில், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அரபு மொழியில் துக்கப் பாடல்கள் பாடி வழிபடுவர்.



அதன்படி, கோவை போத்தனூர் பகுதியில் ஷியா பிரிவை சார்ந்த இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர், அவர்களது உடலில் ரத்தம் வழிய மார்பில் அடித்துக் கொண்டு மொஹரம் பண்டிகையை துக்க நிகழ்வாக அனுசரித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...