கோவை உக்கடம் பகுதியில் காற்றில் சரிந்து விழுந்த சோலார் மின் கம்பங்கள்...!

கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, வாலாங்குளக்கரையில் இருந்த 10 க்கும் மேற்பட்ட சோலார் மின் விளக்கு கம்பங்கள் கீழே சரிந்து விழுந்துள்ளது. அவை மழையில் நனைந்தபடி உள்ளதால், பழுதடைந்து பயனற்று போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


கோவை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவை உக்கடம் வாலாங்குளம் கரைகளை பலப்படுத்தி போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக குளத்தின் கரையில் போக்குவரத்திற்காக ஒரு வழிச்சாலை அமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரைகளில் அனைத்தும் நவீன சோலார் மின்விளக்குகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.

தற்பொழுது,கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நேற்று குளக்கரையில் அமைக்கப்பட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட சோலார் மின் விளக்கு கம்பங்கள் கீழே சரிந்து விழுந்துள்ளது.



கீழே விழுந்த சோலார் மின் கம்பங்கள், மழையில் நனைந்தபடி உள்ளதால், அவை பழுதடைந்து பயனற்று போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சமந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பங்களை சரிசெய்து அவற்றை மீண்டும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...