மின் கட்டண உயர்வு: கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதால், மின் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற கோரி பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.


கோவை: தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கோவையில் மக்கள் நீதி மய்யத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே, தமிழக அரசின் சொத்து வரி உயர்வு நடவடிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், தற்போது அரசின் மின் கட்டண உயர்வுக்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மின் உயர்வை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, கோவை உக்கடம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மையத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மின் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதால், மின் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற கோரி பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.



இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாநில செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்,.நகர செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...