மின் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதால், மின் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற கோரி பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.
கோவை: தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கோவையில் மக்கள் நீதி மய்யத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே, தமிழக அரசின் சொத்து வரி உயர்வு நடவடிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், தற்போது அரசின் மின் கட்டண உயர்வுக்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மின் உயர்வை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை உக்கடம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மையத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதால், மின் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற கோரி பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாநில செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்,.நகர செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே, தமிழக அரசின் சொத்து வரி உயர்வு நடவடிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், தற்போது அரசின் மின் கட்டண உயர்வுக்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மின் உயர்வை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கோவை உக்கடம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மையத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதால், மின் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற கோரி பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாநில செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்,.நகர செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.