கோவை வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு..!

தொடர் மழையால், 20-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. 19-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்தது. 26-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.


கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சாலையின் குறுக்கே மரம் விழுந்து 1 மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அருந்தும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் 20-வது கொண்டை ஊசி வளைவில் தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு சாலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்களும் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வரும் வாகனங்களும் ஒரு மணி நேரமாக காத்திருந்தது.



நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.



மேலும் 19-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்தது.

26-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.



நெடுஞ்சாலைத் துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதிகளில் செல்லக்கூடிய வாகனங்கள் மெதுவாகவும், ஓட்டுநர்கள் அச்சத்திலும் செல்கின்றனர். கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...