தொடர் மழையால், 20-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. 19-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்தது. 26-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.
கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சாலையின் குறுக்கே மரம் விழுந்து 1 மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அருந்தும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் 20-வது கொண்டை ஊசி வளைவில் தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு சாலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்களும் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வரும் வாகனங்களும் ஒரு மணி நேரமாக காத்திருந்தது.

நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

மேலும் 19-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்தது.
26-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.

நெடுஞ்சாலைத் துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதிகளில் செல்லக்கூடிய வாகனங்கள் மெதுவாகவும், ஓட்டுநர்கள் அச்சத்திலும் செல்கின்றனர். கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அருந்தும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் 20-வது கொண்டை ஊசி வளைவில் தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு சாலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்களும் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வரும் வாகனங்களும் ஒரு மணி நேரமாக காத்திருந்தது.
நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
மேலும் 19-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்தது.
26-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.
நெடுஞ்சாலைத் துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதிகளில் செல்லக்கூடிய வாகனங்கள் மெதுவாகவும், ஓட்டுநர்கள் அச்சத்திலும் செல்கின்றனர். கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.