திருப்பூரில் நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு- தமிழக முதலமைச்சர் பங்கேற்பு..!

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநாடு நாளைய தினம் தொடங்க இருப்பதாகவும், கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாக மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு நாளைய தினம் திருப்பூரில் துவங்கி 4-நாட்கள் நடைபெற உள்ளது.



இதுகுறித்து திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் முத்தரசன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநாடு நாளைய தினம் தொடங்க இருப்பதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு பின்பற்றக்கூடிய மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகளுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகவும், மக்கள் விரோத பாசிச மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து மாநாட்டின் ஒரு பகுதியாக செந்தொண்டர் படை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் 75-வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில் மாநாட்டின் நிறைவு நாளான 9-ஆம் தேதி மாநாட்டின் முகப்பில் தேசியக்கொடி ஏற்றப்படும் எனவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து தொண்டர்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவார்கள் எனவும் தெரிவித்தார்.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் 20-கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சாலையோரங்களிலும் வசித்து வரக்கூடிய நிலையில் பிரதமர் மோடி நாடு வளர்ச்சி அடைந்து விட்டதாக தெரிவித்து வருவது ஏன் என தெரியவில்லை என்றும், அதிமுகவிற்குள் எந்த பிரச்சினையும் இல்லை. பாஜகவால் ஏற்படுத்தப்படுவதாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின் சுயமாக சிந்திக்கும் முடிவை அதிமுக இழந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...