அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநாடு நாளைய தினம் தொடங்க இருப்பதாகவும், கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாக மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு நாளைய தினம் திருப்பூரில் துவங்கி 4-நாட்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் முத்தரசன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநாடு நாளைய தினம் தொடங்க இருப்பதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒன்றிய அரசு பின்பற்றக்கூடிய மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகளுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகவும், மக்கள் விரோத பாசிச மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து மாநாட்டின் ஒரு பகுதியாக செந்தொண்டர் படை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் 75-வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில் மாநாட்டின் நிறைவு நாளான 9-ஆம் தேதி மாநாட்டின் முகப்பில் தேசியக்கொடி ஏற்றப்படும் எனவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து தொண்டர்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவார்கள் எனவும் தெரிவித்தார்.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் 20-கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சாலையோரங்களிலும் வசித்து வரக்கூடிய நிலையில் பிரதமர் மோடி நாடு வளர்ச்சி அடைந்து விட்டதாக தெரிவித்து வருவது ஏன் என தெரியவில்லை என்றும், அதிமுகவிற்குள் எந்த பிரச்சினையும் இல்லை. பாஜகவால் ஏற்படுத்தப்படுவதாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின் சுயமாக சிந்திக்கும் முடிவை அதிமுக இழந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் முத்தரசன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநாடு நாளைய தினம் தொடங்க இருப்பதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒன்றிய அரசு பின்பற்றக்கூடிய மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகளுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகவும், மக்கள் விரோத பாசிச மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து மாநாட்டின் ஒரு பகுதியாக செந்தொண்டர் படை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் 75-வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில் மாநாட்டின் நிறைவு நாளான 9-ஆம் தேதி மாநாட்டின் முகப்பில் தேசியக்கொடி ஏற்றப்படும் எனவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து தொண்டர்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவார்கள் எனவும் தெரிவித்தார்.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் 20-கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சாலையோரங்களிலும் வசித்து வரக்கூடிய நிலையில் பிரதமர் மோடி நாடு வளர்ச்சி அடைந்து விட்டதாக தெரிவித்து வருவது ஏன் என தெரியவில்லை என்றும், அதிமுகவிற்குள் எந்த பிரச்சினையும் இல்லை. பாஜகவால் ஏற்படுத்தப்படுவதாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின் சுயமாக சிந்திக்கும் முடிவை அதிமுக இழந்து விட்டதாகவும் தெரிவித்தார்.