கோவையில் 56 – வது பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டி..!

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து இரண்டாம் நாள் போட்டி முடிவில் இந்திய கப்பல் படை, ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில மின்சார வாரியம் முன்னிலை வகிக்கிறது.


கோவை: பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் இப்போட்டிகள் நடைபெறுகின்றது.



இதில், பஞ்சாப் போலீஸ் அணி - பஞ்சாப், இந்திய கப்பல் படை அணி - லோனாவாலா, ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி - (சென்னை), ஸ்போர்ட்ஸ் ஹால்டல் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி - சென்னை, ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணி (ஐசிஎஃப்) - சென்னை, கேரளா மாநில மின்சார வாரிய அணி - கேரளா, கேரளா போலீஸ் அணி - கேரளா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா - பெங்களூரு ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

இன்றைய (04.08.2022) முதல் போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து கேரள போலீஸ் அணி விளையாடியது. இதில் இந்திய கப்பல் படை அணி 92 – 41 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

இரண்டாவது போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரியம் அணி விளையாடியது. இதில் கேரள மாநில மின்சார வாரியம் அணி 57 – 54 என்ற புள்ளி கணக்கில் வென்றது.



மூன்றாவது போட்டியில் ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணியை எதிர்த்து ஸ்போர்ட்ஸ் ஹால்டல் ஆஃப்; எக்ஸலன்ஸ் அணி விளையாடியது. இதில் நான்காம் சுற்று முடிவில் இரு அணிகளும் 87 – 87 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தது. இதை தொடர்ந்து 5 நிமிடங்கள் போட்டி நீடித்து வழங்கப்பட்டது. இதன் முடிவில் ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி 96 – 90 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

நான்காவது போட்டியில் ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணியை (ஐசிஎஃப்) எதிர்த்து பேங்க் ஆஃப் பரோடா அணி விளையாடியது. இதில் பேங்க் ஆஃப் பரோடா அணி 95 – 68 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

இன்று (05.08.2022) போட்டியில் விளையாடும் அணிகள் விவரம்:-

முதல் போட்டியில் ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணியை (ஐசிஎஃப்) எதிர்த்து கேரள மாநில மின்சார வாரியம் அணி விளையாடுகின்றது. இரண்டாவது போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி விளையாடுகின்றது.

மூன்றாவது போட்டியில் ஸ்போர்ட்ஸ் ஹால்டல் ஆஃப்; எக்ஸலன்ஸ் அணியை எதிர்த்து கேரள போலீஸ் அணி விளையாடுகின்றது. நான்காவது போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்து பேங்க் ஆஃப் பரோடா அணி விளையாடுகிறது.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...